Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Writer✍️
Joined
Nov 6, 2024
Messages
37
Reaction score
23
Points
8
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
என் ஜன்னல் நிலவு 19

என்னங்க இது ?

உனக்குத்தான் படிக்க தெரயுமே. "படிச்சி தெரிஞ்சிக்க"அவளை கடுப்பேத்தி
அவன் உள்ளே சென்றுவிட்டான்.

நானென்ன எனக்கு படிக்க தெரியாது,"நீங்க படித்து சொல்லுங்கன்னா சொன்னேன்...?"...
எதுக்கு இப்போ இதெல்லாம் நான் போகமாட்டேன் என்றாள் சத்தமாக .

உள்ளே சென்றவன் இப்போது எதிரே வந்தான் ,
ஏன்...? "ஏன் மேடம் ஏன் போக மாட்டிங்க?"

ஆமா, "நான் ஏன் போனும் ?"
வெடுக்கென வந்தது அவள் பதில்.


அவனும்
நீ போய் தான் ஆகணும் . நான் சொல்லிட்டேன்.அவன் அவளுக்கு மேல் அடமாக ,

இல்ல, "அது எப்படி என்னை கட்டாயபடுத்துவீங்க?..."
"என்னால முடியாது" . நான் போகமாட்டேன்.

அப்படியா..." நீ முடிவாத்தான் சொல்லுறீயா?" கறாராக கேட்டான்.

சரியான கறார் பேர்வழி,இவன் கிட்ட இப்படி பேசினால் ஆகாது.
சரண்டர் ஆகிடவேண்டியதுதான்.

என்னங்க, ப்ளீஸ்ங்க.நான் போகல...

அவள் நடிப்பில் அப்படி ஒரு சிரிப்பு ...
...
"முதலில் மிஞ்சி பார்த்த,
முடியல என்றதும் இப்போ கெஞ்சிற அப்படித்தான ?..."

அப்படியெல்லாம் இல்லங்க... ப்ளீஸ் எனக்கு விருப்பம் இல்ல...
நான் இனி படிச்சி என்ன பண்ண போறேன். நான் போகல...
"ப்ளீஸ்...
ப்ளீஸ்"
என்றவள் அவன் தாடையை பிடித்து கெஞ்சி கொஞ்சி பார்த்தாள்.

கொஞ்சம் ஏமாந்தாலும் இவள் போகமாட்டாள் என்பதால்
அவள் பேச்சை கேட்பதாய் இல்லை.

பபிலன் கேட்பதாய் இல்லை .முடியவே முடியாது .நீ போய்தான் ஆகணும்.

முகத்தை திருப்பிக்கொண்டு கட்டிலில் குப்பற படுத்துவிட்டாள்.

அவள் பின்னாலே வந்தவன்," நீ என்னதான் பண்ணாலும்; நீ போய்தான் ஆகணும் ."
நான் சொன்ன மாதிரி கொஞ்ச நாள் கோச்சிங் செண்டர் போய் பாறேன்.
அப்புறம் ,
"உனக்கே பிடிச்சிரும்."

என்ன சொல்லுற ?

அவள் பதில் சொல்லவில்லை.
அவனும் குளிக்க சென்றுவிட்டான்.

என்ன பண்ணலாம்...என்ன பண்ணலாம் ...

...
இதோ,
நான் இப்பவே அத்தைக்கு சொல்லுறேன்.

உடனே மாமியாருக்கு அழைத்து விசத்தை சொன்னாள்.
அவரும் பொறுமையாக

"அட என்னம்மா சுகன்யா ,
நீ நல்ல படிக்கிற பொண்ணுதானம்மா..."
நீ படிச்சி அரசாங்க வேலைக்கு போனா...

நம்ம குடும்பத்துக்கே மரியாதையா இருக்கும்...

அவளுக்கு அறிவுரை சொன்னவரை இடைநிறுத்தி
போதும் போதும் அத்த...

ஆனாலும் நீங்க இவ்ளோ நல்ல மாமியாரா இருக்க வேண்டாம்
சலித்துக்கொண்டாள் பெண் ..

அந்த பக்கம் தேவிக்கு நல்ல சிரிப்பு

அட என்னம்மா யாருகிட்ட பேசிட்டு இருக்க
ஒரே சிரிப்பா இருக்கு .

நம்ம சுகன்யா கிட்டதான்...

ஐ! அண்ணியா?
இங்க கொண்டா.. கொண்டா... நான் பேசுறேன் .

ஏய்! இருடி நான் பேசிட்டு தரே...ன்...

பிடுங்கி சென்றுவிட்டாள்.

"என்ன பொண்ணோ...
என்னவோ போ..." அவர் சென்றுவிட்டார்.

"ஹாய் அண்ணி",
"என்ன...?
இன்னைக்கு என்கிட்டே பேசவேல்ல"
ஆனால்,
"உங்க மாமியார் கிட்ட மட்டும் கொஞ்சிட்டு இருக்கீங்க..."

சும்மா விளையாடாத பவி,
" நானே கடுப்பில் இருக்கேன் என்றாள் சோகமாக."

"என்னாச்சி அண்ணி?"
"ஏன் இம்புட்டு கவலை?"

அது எல்லாம் உங்க அண்ணாவாலதான்...

அப்படியா... அப்போ கண்டிப்பா பெரியா பிரச்சனையாத்தான் இருக்கும் .நீங்க சொல்லுங்க
உங்களுக்கு நான் இருக்கேன் .

அப்படியா நீ இருக்கீயா ...

அட ஆமாண்ணி என்னன்னு மட்டும் சொல்லுங்க

அவன நான் பாத்துக்குறேன்.
"அப்படி என்ன நடந்தது "?.
ஏன் இவ்வளோ யோசிக்கிறீங்க?


அது பவி ,
உங்க அண்ணே என்ன கோச்சிங் கிளாஸ் போக சொல்லுறாங்க...

என்ன கோச்சிங்கா?நீங்க எப்போ அண்ணி ஸ்போர்ட்ஸ் கத்துக்கிட்டீங்க?

ஐயோ பவி!
உன்ன ... பாத்துக்க
நீ மட்டும் என் பக்கத்துல இருந்த...
அவ்வுளவுதான்.

ஓ! சாரி சாரி அண்ணி...
"நீங்களே சொல்லுங்க ..."

நான் படிச்சி தேர்வு எழுதி அரசு வேலை பார்க்கணுமாம் .
அதுதான் என் பிரச்சனை .

இதுல என்ன பிரச்சனை அண்ணி...

நல்ல விஷயம் தான ... நீங்களும் சும்மா இருக்கிறதா பீல் பண்ணவேண்டாம் . சந்தோசமாகவே போங்க
அப்படி போறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா அப்புறம் போகலன்னு சொல்லுங்க ,

அட
நல்ல பொண்ணு போ ...குடும்பமா நல்லா பேசுறீங்கப் போ...சலித்துக்கொண்டாள்.

அதுவரையில் அவள் பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்தவன்...
இப்போது,

க்கும்.. என்ன? ....
"எல்லாரும் என்ன சொல்லுறாங்க ?"

அவன் சத்தத்தில் அவள் திரும்ப அசந்த நேரம்
அவள் கையில் இருந்த போனை வாங்கி அழைப்பை துண்டித்து மனைவியிடம் கேட்டான்.

அது.. அது... ஒன்னும் இல்லையே .ஒன்னும் இல்லை.

அப்படியா...
வா இங்க கிட்டவந்து பேசு.

முடியாது போ,
" நான் வரமாட்டேன் நீங்க ..."

நாங்க , சொல்லுடி பொண்டாட்டி...
விலகி எட்டிநின்ற மனைவியை
தன் தோள் வளைவுக்கு கொண்டுவந்துவிட்டான்.

கணவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி "போடா அதான் சாதிச்சீட்டியே..."நான் தூங்க போறேன்.
சென்று படுத்துவிட்டாள் .

மறுநாளில் இருந்து தொடர்ந்து பபிலன் சேர்த்துவிட்ட
கோச்சிங் சென்டர் சென்று வந்தாள்.

நாள் தோறும் செல்வோருக்கு வார இறுதி விடுமுறை.
காலை ஒன்பது மணி சென்றாள் மதியம்
ஒரு மணி வீட்டுக்கு வந்துவிடலாம்.

அங்கே கொடுத்த புத்தகங்கள் எல்லாம் பெரிதே.
அதை பார்த்த சுகன்யா ரத்த கண்ணீர் வடிக்காத குறைதான்.

அது மட்டுமா "தினமும் சின்ன சின்ன பரீட்சை வேறு".
மொத்தத்தில் சுகன்யா,
"கஷ்டமோ கஷ்டத்தில் இருக்கிறாள்."

பபிலன் வேலைக்கு செல்வதால்
மனைவியிடம் இருந்து தப்ப்பித்து கொண்டான்.

அவன் வந்ததும் அவனை ஒருவழி செய்துவிடுவாள் .

பவியும் சரண்யாவும் தான் ரொம்ப பாவம்.

பவிக்கு வேறு விடுமுறை.ஆதலால் ,கடுப்பாகும் போதெல்லாம் போன் செய்து அவளையும் பபிலனையும்
மொத்தத்தில் குடும்பத்தையே திட்டுவாள்.

அதுமட்டுமா சரண்யாவுக்கு வேறு கூடிய விரைவில் திருமணம்.
சுகன்யா சும்மா இருக்காமல்," அவளை அவள் வருங்கால கணவருடன் பேசவிடாமல்
இவள் படிப்பு படிப்பு என்று படும் பாட்டை....
அவளுக்கு சொல்லி அவளையும் இருக்க விடமாட்டாள். "

ஆகா, "சுகன்யா கோச்சிங் சென்றதில் இருந்து பபிலன் மகிழ்ச்சியாக இருக்கிறான்".

வாழ்க்கை எப்போதும் இயல்பாக செல்லுமா ?...


வணக்கம் நண்பர்களே ,
சென்ற பதிவுக்கு like செய்தவர்களுக்கு
நன்றி !

மேலும் கதையை வாசித்துவிட்டு தங்கள் கருத்துக்களை
பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு
கருத்துக்களும் என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்.
பிடித்திருந்தால் மறக்காம like செய்யுங்கள்.
 

Latest threads

Top Bottom