Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

ஓருயிரென வாழ

நந்தவனப்பூக்கள்
Joined
Sep 23, 2024
Messages
30
Reaction score
6
Points
8
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
#ஓருயிரென_வாழ

#எழிலன்பு

#திருமதிஅப்சரஸ்பீனாலோகநாதன்
#கவிக்குயிலின்கவிவிமர்சனம்



கௌதம்_ஜீவிதா
(அப்பு ❤️ பப்பு)


தன்வார்த்தைக்கு கட்டுப்படுத்த
துடிக்கும் மாமியார்
தாங்க முடியாத அழுத்தமாக
தன் புந்தவீடு
தனக்கு சுமையாக மாற..



தன் மகனின் வாழ்க்கையை கூட
தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் திமிரும் வஞ்சம் தூக்கலாக சண்முகி...

தவறான புரிதலில்
தன்னை போலவே
தன் மருமகள்கள்
தன் கைப்பிடிக்குள்
தன் வீட்டில் இருக்க
துடிக்கும் மாமியார் ...

தனித்துப் போராட முடியாமல்
தன் கணவனின் பேச்சைக் கேட்டு
தன் மாமியாரின் சொல்படி
தன்னையே மாற்றி தனித்து நிற்கும் அண்ணி மகதி...

அன்னை பேச்சே
அதிமுக்கியமாய் கருதும்
அண்ணன் கோகுல் அன்னையின் சுயரூபம் அறிந்த பிறகு
அவனின் மாற்றம்
அருமை.....



தனக்கு முன்னாள்
தவறி போன
தன் கைநழுவி தொலைந்த காதல்
துயரத்திலிருந்து மீண்டு
திருமணத்தில் இணையும்
கௌதம்

துயரத்தில் தொடங்கினாலும் தங்களின் புரிதலில் திருமணத்தின் தொடக்கத்திலேயே துணையின் எண்ணங்களை
புரிந்து கொள்ளும் தன்மை இருவருக்கும்
துணை நின்று
தாம்பத்தியம் சிறக்க...


தூணாக மனைவிக்கு
தோளாக நின்று
தாங்கும் கணவனாக கௌதம் ...

தன்னுடைய காதலை மட்டும் அல்ல
தன்வாழ்க்கையின் நியாயத்தையும் நிஜத்தையும் பேசி
நிற்கும் கணவன்....



தனக்கென கனவுகள் கொண்ட மனைவியின்
தாழ்ந்த குரலையும் புரிந்து கொண்டு,
தடைகள் வந்தாலும்
தளராமல்
துணை நிற்கும் அவன் காதல் வரம்…



தன்னவளின் அமைதியில் கூட
தன் பெயரை படிக்கும் கணவன்,
தன் மனதின் மொழியை
தவறாமல் உணரும் மனைவி…

தாய் என்ற பெயரில் வரும் துரோகம்,
தனித்து போக நினைக்கும் நேரத்தில் கூட
தவிக்கும் இதயத்தை
தாளாமல் இரு உள்ளங்கள்
துடிக்கும் நேரம் துயரம்...


தவிப்பும் குழப்பமும் நடுவில்
தள்ளாடும் கௌதம்,
தீர்வு தேடி நின்று
தன் வாழ்க்கையை மீண்டும் சீரமைக்க....


துணிவும் பொறுமையும் சேர்ந்து
தகர்ந்த உறவுகளை திருத்தி
திருத்த முடியாத நேரத்தில் தணிந்தும்
தன் குடும்பத்தில்
தெளிவான சந்தோஷத்தை விதைக்கிறான்…


தோல்விகள் வந்தாலும்
தாழாமல் நிற்கும்
திடமான மனம் இருந்தால்,
தவறுகள் கூட
தீர்க்கப்படும் என்பதற்கு இந்த கதை சாட்சி…



தீர்க்கமான காதலும் புரிதலும் சேர்ந்தால்
திருத்தமாக வாழ்க்கையும்
தெளிந்த ஒளியாக மாறும்…


அருமை மா 💐 💐
வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻🤩❤️💝🍫
 
இங்கேயும் உங்கள் விமர்சனத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி சிஸ் ❤️ ❤️

மிக்க நன்றிகள் ❤️ ❤️
 

Latest threads

Top Bottom